தேடுதல்

அருள் பணியாளர் Jacques Hamel அவர்களின் கல்லறை அருள் பணியாளர் Jacques Hamel அவர்களின் கல்லறை 

இறை ஊழியரான Jacques Hamel அவர்களின் 2ம் ஆண்டு நினைவு

இறைவனின் ஊழியரான அருள்பணி Jacques Hamel அவர்கள், இறைவனடி சேர்ந்த இரண்டாம் ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் Saint-Étienne-du-Rouvray நகரம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள் பணியாளரும், இறைவனின் ஊழியருமான Jacques Hamel அவர்கள், இறைவனடி சேர்ந்த இரண்டாம் ஆண்டு நினைவை, பிரான்ஸ் நாட்டின் Saint-Étienne-du-Rouvray நகரம் கடைபிடிக்கும் என்று அந்த நகர அவை அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி, அருள்பணி Hamel அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், ISIS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவைச் சார்ந்தவர்கள் என்று தங்களையே அறிவித்துக்கொண்ட இரு இளையோரால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அருள்பணி Hamel அவர்கள், கொலையுண்ட இரண்டாம் ஆண்டு நினைவை, Saint-Étienne-du-Rouvray நகர அதிகாரிகள், ஜூலை 26, இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு அந்நகரின் சதுக்கத்தில் கொண்டாட உள்ளனர்.

ஜூலை 25, இப்புதன் மாலை, புனித ஸ்தேவான் ஆலயத்தில், செபமாலையும், அதன் பின் அருள்பணி Hamel அவர்களின் வாழ்வைக் குறித்த சாட்சியங்களும் கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத்தவரால் பகிர்ந்துகொள்ளபப்டும் என்று,  Rouen உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

Rouen உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Dominique Lebrun அவர்கள், இறைவனின் ஊழியரான அருள்பணி Jacques Hamel அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2018, 15:26